search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி"

    • பெற்றோர் எதிர்ப்பு
    • கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு அடுத்த லாடாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா (வயது 19) இவரும் வாலாஜா அடுத்த பூண்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (23) என்ற வாலிபரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் நித்யாவிற்கு திருமணம் செய்வதற்காக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

    இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய நித்யா மற்றும் சந்தோஷ் ஆகியோர் கடந்த 22-ந் தேதி பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் பாதுகாப்பு கேட்டு நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ேஜாடிகள் தஞ்சம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் காதல் திருமண ஜோடியை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பேரில் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து சமரசம் செய்ய முயன்றனர்.

    இதில் சமரசம் ஏற்படாததால் நித்யா தனது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    • சுசீந்திரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • கருங்கல் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள கப்பியறை பனங்குழி சரல்விளையை சேர்ந்தவர் ஈஸ்வரபிரசாத். இவரது மகன் பிரதீபன் (வயது 23). நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன் நகரை சேர்ந்த இருதய ஜேம்ஸ் மகள் மேரி ரோஷினி (21). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    வெவ்வேறு சமூக பிரிவு மற்றும் மதத்தை சார்ந்த இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று பிரதீபன் மற்றும் மேரி ரோஷினி ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சுசீந்திரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் பெற்றோரால் தங்களுக்கு பிரச்சினை ஏற்படலாம் என கருதி கருங்கல் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    கருங்கல் போலீசார் இருவீட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த இருவீட்டாரிடமும் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்க ளுக்கு திருமணம் செய்ய உரிமை உள்ளது என கூறியதோடு பெற்றோரால் அவர்களுக்கு எந்த பிரச்ச னையும் ஏற்படக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

    • வாலிபரின் மடியில் ஏறி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து ‘ரொமான்ஸ்’ செய்வது போன்ற காட்சிகள் இருந்தன.
    • பயனர்கள், காதல் ஜோடியை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபரின் மடியில் ஒரு இளம்பெண் அமர்ந்து செல்வது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்த இளம்பெண், வாலிபரின் மடியில் ஏறி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து 'ரொமான்ஸ்' செய்வது போன்ற காட்சிகள் இருந்தன. டுவிட்டரில் இந்த காட்சிகள் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து காசியாபாத் போலீசார் விசாரணை நடத்தினர். வீடியோவில் உள்ள காதல் ஜோடியின் முகம் தெளிவாக தெரியாத நிலையில், மோட்டார் சைக்கிளின் எண் தெரிந்தது. அதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே வீடியோவை பார்த்த பயனர்கள், காதல் ஜோடியை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 'ரொமான்ஸ்' செய்வதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? வைரல் வீடியோவுக்காக எந்த எல்லைக்கும் செல்வதா? என்பது போன்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • ராம்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.
    • நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.இவரும் அவரது பக்கத்து ஊரான வாணியம்பாளையத்தை சேர்ந்த நிர்மலா (22) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நிர்மலாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்றும் ராம்குமார் கடத்தி சென்றதாகவும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிர்மலாவை தேடி வந்தனர். இதற்கிடையில் காணாமல் போன நிர்மலா, ராம்குமார் உடன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
    • நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கவியரசன் (வயது 22). இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

    அண்ணா நகர் அருகே உள்ள நெட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கார்த்திகா (21). இவர் பி.சி.ஏ பட்டதாரி.

    இவர்கள் இருவரும் உற வினர்கள் என்பதால், இவர்க ளுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருடைய பெற்றோருக்கும் தெரிய வந்ததால், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோருக்கு பயந்து நேற்று பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருதரப்பு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே கார்த்திகா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அவரை கவியரசனுடன் மகளிர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • காதல் ஜோடி மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் மாரீஸ்வரி(வயது19). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதே கல்லூரியில் படிப்பவர் சங்கரப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் என்பவரின் மகன் தனுஷ்வரன்(20), மாரீஸ்வரியும், தனுஷ் வரனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி மதியம் வீடு திரும்பவில்லை.

    பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். மாலையில் அவரது சகோதரர் பிரேம்குமாருக்கு செல்போனில் மாரீஸ்வரி அழைத்துள்ளார். கல்லூரியில் உடன் படிக்கும் தனுஷ்வரனை காதலித்த தாகவும், அவருடன் சென்றிருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறினார். இதுகுறித்து பிரேம்குமார் பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தந்தை பாலமுருகன் சங்கரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று ராமஜெயத்திடம் விசாரித்துள்ளார். அப்ேபாது ராமஜெயம் தனக்கும் இப்போதுதான் தனது மகன் அழைத்ததாகவும் தன்னுடன் படிக்கும் மாரீஸ்வரியை அழைத்து சென்றிருக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து இரு வீட்டாரும் காதல்ஜோடியை பற்றி பலரிடம் விசாரித்தும், அவர்களை பல இடங்களில் தேடியும் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து மகளை மீட்டு தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

    • இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
    • தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு கோவிந்தசாமியின் சொந்த ஊரான சொரக்காப்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெங்களுரு காவல் நிலையத்தில் தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதையறிந்த ஐஸ்வர்யா மற்றும் கோவிந்தசாமி இருவரும் நேற்று மாலை தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 19). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து தேர்ச்சி பெற்று வீட்டில் உள்ளார். இவரும் அடியனூத்து பகுதியைச் சேர்ந்த தாமஸ்ராஜ் (23) என்ற இறைச்சி கடை வியாபாரியும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்த விபரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் மகளை காணாமல் பல இடங்களில் தேடிய மாணவியின் பெற்றோர் இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் தேடுவதை அறிந்ததும் காதல் ஜோடி தாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்கும்படி வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த திருமணத்தை மாணவியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து தனது பெற்றோர் வாங்கிக் கொடுத்த தோடு, மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட அனைத்து தங்க நகைகளையும் போலீசார் முன்னிலையில் கழற்றி தனது தாயிடம் கொடுத்து விட்டு எனக்கு பெற்றோர் வேண்டாம். காதல் கணவர்தான் வேண்டும் என எழுதிக் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவரது தாய் கண்ணீர் மல்க இனிமேல் தன் முகத்தில் விழிக்க வேண்டாம் என கூறி அங்கிருந்து சென்று விட்டார். அதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை மற்றும் காதலனின் குடும்பத்தினரிடம் அவர்கள் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ்வதற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டனர். இதனையடுத்து காதல் கணவருடன் மாணவி புறப்பட்டுச் சென்றார்.

    • கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர்.
    • சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லையில் சுமார் 3000 அடிக்கு மேலே அடர்ந்த வனப்பகுதியில் மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த மலை கிராமத்தை சேர்ந்த சின்னான் - தனலட்சுமி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து காதலர்கள் தங்களது காதல் குறித்தும் பெற்றோர் எதிர்ப்பு பற்றியும் கிராம பஞ்சாயத்தார்களிடம் முறையிட்டு, தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தனரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர். பின்னர் சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து பழங்குடியினர் முறைப்படி பாட்டு, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளரும், தளி பேரூராட்சி துணை தலைவருமான செல்வன், வன உரிமை குழு தலைவர்கள் முருகன், குப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
    • போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் லெனின் கிறாஸ் (வயது 29). என்ஜினீயரான இவர், துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பட்டதாரி பெண்ணுடன் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகிய இருவரும் கடந்த 3 வருடமாக காதலிக்க தொடங்கினர்.

    லெனின் கிறாஸ் ஊருக்கு வந்தபோது, காதல் ஜோடியினர் பல்வேறு பகுதிகளில் ஒன்றாக சுற்றி வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்ற லெனின் கிறாஸ், காதலிக்கு செலவுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் இருவரும் தினமும் பேசி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிறாஸ் ஊர் திரும்பினார். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

    இந்த தகவல் காதலிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலன் லெனின் கிறாசை தேடி வந்தார். அப்போது தான் அவருக்கு திருமண தேதி பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

    உடனடியாக சைமன் காலனிக்கு விரைந்து சென்ற காதலி பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் 11-ந் தேதி லெனின் கிறாசிற்கு வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

    திருமண நேரத்தில் ஆலயத்தில் சென்று காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். மனுவை பரிசீலித்த அவர், நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர் அளித்த புகாரில் ஆதாரங்கள் இருந்ததால், காதலியை திருமணம் செய்யும்படி, லெனின் கிறாசுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து இருவரும் குளச்சலில் உள்ள ஒரு குருசடி முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

    வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தி 9 நாட்கள் போராட்டம் நடத்திய காதலியின் துணிச்சலை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
    • பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (வயது19) 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (22) கூலி தொழிலாளி.

    இளம்பெண்ணும் மோகனும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் வீட்டில் தெரிய வரவே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஒடுக்கத்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

    • பட்டு வேட்டி, பட்டு சேலையில் வந்தனர்
    • 5 வருடமாக காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் பிந்து (வயது 23). இவர் குளச்சலில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குலசேகரம் மங்கலத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர் தக்கலையில் ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு பிந்து அடிக்கடி செல்லும்போது விக்னேசை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து பிந்து வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து தந்தையின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் காதலன் விக்னேசுடன் சென்றார்.

    இந்த நிலையில் பிந்துவை காணவில்லை என பெற்றோர் தேடத் தொடங்கினர். இது பற்றி தெரியவந்ததும் பிந்து, காதலன் விக்னேசுடன் நேற்று இரவு குளச்சல் போலீஸ் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தார்.

    அப்போது காதல் ஜோடியினர் பட்டு வேட்டி, பட்டுச்சேலை அணிந்து வந்திருந்தனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விசாரணை நடத்தினார்.

    அப்போது பிந்து, தாங்கள் 5 வருடமாக காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். இதுபற்றி அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது பிந்து, காதலர் விக்னேசுடன் செல்வதில் உறுதியாக இருந்ததார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி விக்னேஷூடன் அனுப்பி வைத்தனர். அப்போது பிந்து வீட்டிலிருந்து தான் எடுத்து சென்ற ஸ்கூட்டியை தந்தையிடம் ஒப்படைத்து சென்றார்.

    ×